அரசு விடுதிகளில் சேர மாணவ - மாணவிகள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் தகவல் - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Saturday 4 December 2021

அரசு விடுதிகளில் சேர மாணவ - மாணவிகள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் தகவல்

ரோடு மாவட்டத்தில் உள்ள அரசு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார். அரசு விடுதிகள் ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:- 

 தமிழ்நாடு அரசால் ஈரோடு மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் மாணவ -மாணவிகளுக்கென 35 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி மாணவர்களுக்கான பள்ளிக்கூட விடுதி 16-ம், மாணவிகளுக்கான பள்ளிக்கூட விடுதி 11-ம், மாணவ -மாணவிகள் கல்லூரி விடுதிகள் தலா 4-ம் உள்ளன. 

 பள்ளிக்கூட விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் பிளஸ் -2 வரை படிக்கும் மாணவ -மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் படிக்கும் மாணவ -மாணவிகளும் சேரத்தகுதி உடையவர்கள் ஆவர். இலவச உணவு அனைத்து விடுதி மாணவ - மாணவிகளுக்கும் இலவசமாக உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படும். எஸ்.எஸ்.எல்.சி. வரை படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு 2 செட் சீருடைகள் வழங்கப்படும். 

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். மலைப்பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும். பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து படிக்கும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது. இலங்கை தமிழர்கள் தகுதி உடைய மாணவ -மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடம் இருந்தோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் 5-ந்தேதிக்குள் (நாளை) சமர்ப்பிக்க வேண்டும். மாணவ -மாணவிகள் விண்ணப்பிக்கும் போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் பின்னர் அளித்தால் போதுமானது. மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே மாணவ -மாணவிகள் அரசின் இந்த சலுகைகளை பெற்று, பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment