5 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தமிழ் - பாடம் 3 - தொழில் / வணிகம் - புத்தக வினா- விடைகள் - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Tuesday 25 October 2022

5 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தமிழ் - பாடம் 3 - தொழில் / வணிகம் - புத்தக வினா- விடைகள்

PREPARED BY THULIRKALVI TEAM 

 இரண்டாம் பருவம் 

தமிழ்

பாடம்  3

தொழில் / வணிகம் 

பக்கம் - 45

 படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்! 

 அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா? 

  1. வையகம் என்பதன் பொருள் 

அ) ஊர் ஆ) வயல் இ) உலகம் ஈ) கிராமம்

 Answer: இ) உலகம் 

 2. நலனெல்லாம் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………. 

அ) நலன் + எல்லாம் ஆ) நல + னெல்லாம் இ) நலன் + னெல்லாம் ஈ) நலம் + எல்லாம் 

Answer: அ) நலன் + எல்லாம் 

 3. நிறைந்தறம் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….

 அ) நிறைந்து + அறம் ஆ) நிறைந்த + அறம் இ) நிறை + அறம் ஈ) நிறை + தறம்

 Answer: அ) நிறைந்து + அறம் 

 4. ‘இன்பம்’ – இச்சொல்லுக்குரிய எதிர்சொல் …………… 

அ) மகிழ்ச்சி ஆ) களிப்பு இ) கவலை ஈ) துன்பம் 

Answer: ஈ) துன்பம் 

 ஆ. பாடலில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எழுதுக
 
பொங்குக /பொங்கல் 

உணவு /உயிர் 

பணமும் / பயிர்கள் 

உழவு / உடையும் 

இ. பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக

பொங்குக / எங்கணும் 

உணவு / பணம் 

உழவு / பழகு 

ஏழையும் / உழைப்பே 

ஈ. பாடலில் ஒரே ஓசையில் முடியும் சொற்களை எடுத்து எழுதுக.

பொங்குகவே / தங்குகவே 

இல்லாமல் / செல்லாது
 
உணவுதரும் / அணியவரும் 

இருந்தாலும் / விருந்தாகும் 

உ. வினாக்களுக்கு விடையளிக்க. 

  1. அனைவரும் இன்பமுடன் வாழத் தெம்பு தரும் தொழில் எது? 

Answer: அனைவரும் இன்பமுடன் வாழத் தெம்பு தரும் தொழில் உழவுத்தொழில்.

 2. உழவுத்தொழிலால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன?

 Answer: 

(i) எங்கும் யாவரும் இன்பமாய் வாழ்வதற்கு உழவுத்தொழில் பயன்படுகிறது.

 (ii) பயிர்கள் விளைவிப்பதால் செல்வம் சேரும்; உணவு கிடைக்கும்; உடையும் தரும்.

  3. பொங்கலை நாம் எவ்வாறு கொண்டாட வேண்டுமெனக் கவிஞர் கூறுகிறார்?

 Answer: பொருளில்லாதவரும் செல்வமுடையவரும் இணக்கமாய் வாழும் திருநாள் பொங்கல் நாளே. ஆகையால், ஏற்றம் தரும் ஏர்த்தொழிலின் பெருமையை உணர்ந்து அனைவரும் உழவு பொங்கலிட்டுப் பயிர்வளம் பெருக்க வேண்டுமென கவிஞர் கூறுகிறார்.

 ஊ. சிந்தனை வினா.

 ‘உழவர், சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்கமுடியும்’. இதுபற்றி உங்கள் கருத்தென்ன?

 Answer: உழவுத்தொழில் நடைபெறவில்லையெனில் நாம் உணவின்றிதான் வாழ வேண்டும். உழவர்கள், பயிர்களை விளைவிப்பதால் செல்வம் சேரும்; உணவு கிடைக்கும்; உணவுப் பயிர்களே நமக்கு உணவாக அமைகிறது. எனவே, உழவர் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கருத்தாகும். 

  கற்பவை கற்றபின்
பக்கம் - 50

1. உழவுத் தொழிலின் பெருமையை உணர்ந்து போற்றுக. 

Answer: மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும். 

  2. பாடலை ஓசைநயத்துடன் பாடி மகிழ்க. 

Answer:  மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும்.

 3. பாடலிலுள்ள நயங்களைப் பாராட்டுக. 

எதுகை நயம் : பொங்குக – எங்கணும் உணவு – பணம் உழவு – பழகு தங்கம் – இங்கிதன் உழவே – உழவை ஏழையும் – வாழிய 

 மோனை நயம் : பொங்குக – புதுவனம் எங்கணும் – ஏர்த்தொழில் உணவு – உயிரோ பணமும் – பயிர்கள் உழவும் – உடையும் தங்கம் – தானியம்

 இயைபு : பொங்குகவே – தங்குகவே உணவுதரும் – அணியவரும் உணர்ந்திடுவோம் – துணிந்திடுவோம் 

  4. உழவு நடக்கும் இடத்திற்குச் சென்று, செய்தி திரட்டுக. 

Answer: மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும். 


 கூடுதல் வினாக்கள் 

 சரியான சொல்லைத் தேர்வு செய்து எழுதுக.

 1. விழலாகும் என்பதன் பொருள் 

அ) வீணாகும் ஆ) எங்கும் இ) பெருமை ஈ) மகிழ்ந்து 

Answer: அ) வீணாகும் 

2. நாமக்கல் வெ. இராமலிங்கனார் ………….. என்றும் போற்றப்படுகிறார். 

அ) தேசிய கவி ஆ) காந்தியக் கவிஞர் இ) உவமைக் கவிஞர் ஈ) புரட்சிக் கவிஞர்

 Answer: ஆ) காந்தியக் கவிஞர் 

 3. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர் …………… அ) பாரதிதாசன் ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இ) கண்ண தாசன் ஈ) நாமக்கல் வெ. இராமலிங்கனார் 

Answer: ஈ) நாமக்கல் வெ.இராமலிங்கனார்


விதைத் திருவிழா
பக்கம் -50

மதிப்பீடு 

 படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்! 

 அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக. 

  1. அனுமதி – இச்சொல் குறிக்கும் பொருள் 

அ) கட்டளை ஆ) இசைவு இ) வழிவிடு ஈ) உரிமை 

Answer: ஆ) இசைவு 

 2. விளம்பரத்தாள்கள் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

 …………………….. 

அ) விளம்பர + தாள்கள் ஆ) விளம்பரத்து + தாள்கள் இ) விளம்பரம் + தாள்கள் ஈ) விளம்பு + தாள்கள் 

Answer: இ) விளம்பரம் + தாள்கள் 

 3. ஆலோசித்தல் – இச்சொல்லுக்குரிய பொருள் ……………………… 

அ) பேசுதல் ஆ) படித்தல் இ) எழுதுதல் ஈ) சிந்தித்தல் 

Answer: ஈ) சிந்தித்தல்

 4. தோட்டம் + கலை – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
 ………………….. 

அ) தோட்டம்கலை ஆ) தோட்டக்கலை இ) தோட்டங்கலை ஈ) தோட்டகலை

 Answer:  ஆ) தோட்டக்கலை 

 5. பழங்காலம் இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல் ……………………. 

அ) பழைய காலம் ஆ) பிற்காலம் இ) புதிய காலம் ஈ) இடைக்காலம் 

Answer: இ) புதிய காலம் 

 ஆ. கீழ்க்காணும் சொற்களைச் சேர்த்து எழுதுக. 
பக்கம் -51

அ) வழிபாடு + கூட்டம் = …………………….. 

ஆ) வீடு + தோட்டம் = …………………….. 

Answer: 

அ) வழிபாடு + கூட்டம் – வழிபாட்டுக்கூட்டம் 

ஆ) வீடு + தோட்டம் – வீட்டுத்தோட்டம் 

 இ. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக. 

அ) அழைப்பிதழ்- …………. + …………….. 

ஆ) விதைத்திருவிழா- …………. + …………….. 

Answer: 

அ) அழைப்பிதழ் – அழைப்பு + இதழ் 

ஆ) விதைத்திருவிழா – விதை + திருவிழா

  ஈ. கோடிட்ட இடத்தை நிரப்புக. 

 1. விதைத்திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளின் எண்ணிக்கை……….. 

Answer: 27 

 2. விதைகள் …………… ஆனவையாக இருத்தல் வேண்டும்.

Answer: தரம்

 3. கொண்டைக்கடலை என்பது ……………….. ஒன்று. 

Answer: நவதானியங்களுள்

 உ. வினாக்களுக்கு விடையளிக்க. 

 1. மாணவர்களை எங்கே அழைத்துச் செல்வதாகத் தலைமையாசிரியர் கூறினார்?

 Answer:  மாணவர்களை அருகிலுள்ள மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் விதைத் திருவிழாவிற்கு அடுத்த வாரம் அழைத்துச் செல்வதாக தலைமையாசிரியர் கூறினார். 

2. ஆசிரியர் வழங்கிய துண்டு விளம்பரத்தாளில் என்ன செய்தி இருந்தது?

 Answer: ஆசிரியர் வழங்கிய துண்டு விளம்பரத்தாளில் இருந்த செய்தி விதைத்திருவிழா தொடர்பான செய்தி’ ஆகும்.

  3. ‘பாதிப்பு’ என்று எழுதப்பட்ட அரங்கத்தில் என்ன செய்தி சொல்லப்பட்டது?

 Answer: இரசாயன விதைகள், இரசாயனப் பூச்சி மருந்துகள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளைத்தாம் ‘பாதிப்பு’ என்று சொல்கிறார்கள். இதனால், மண்ணின் தன்மை கெடுகிறது. இதனைக் தடுக்கும் வகையில் இயற்கை முறையில் வேளாண்மை செய்ய வேண்டும் என்பதே அதன் பொருள். 

  4. நவதானியங்களுள் ஐந்தின் பெயரை எழுதுக. 

Answer: கொண்டைக்கடலை தட்டைப்பயறு மொச்சை பாசிப்பயறு கோதுமை.

  ஊ. சிந்தனை வினாக்கள். 

 செயற்கை உரங்கள், மண்ணின் வளத்தைக் கெடுக்கும் எனில், அதற்கு மாற்றாக நாம் என்ன செய்யலாம்? 

Answer:  செயற்கை உரங்கள், மண்ணன் வளத்தைக் கெடுக்கும் எனில், அதற்கு மாற்றாக நாம் செய்ய வேண்டுவன: இயற்கை வேளாண்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். மண்புழு வளர்த்தல். கால்நடைகள் வளர்த்து அவற்றின் சாணங்களை எருவாக்குதல். அவுரிச் செடிகளை வளர்த்து வயலுக்கு எருவாக்குதல்.

  கற்பவை கற்றபின் 
பக்கம் -55

 1. இயற்கை வேளாண்மையின் சிறப்புகளைப் பற்றி, வழிபாட்டுக்கூட்டத்தில் பேசுக. 

Answer:  வணக்கம். வேளாண்மையில் செயற்கையான வேதிப்பொருட்களைப் பயன்படுத்தாமல் இயற்கையோடு இணைந்து வேளாண்மை செய்வது இயற்கை வேளாண்மை ஆகும். இம்முறையைப் பயன்படுத்துவதால் மண், நீர், காற்று மற்றும் ஆகாயம் ஆகியவை பாதுகாக்கப்படுகின்றன. பயனீட்டாளர்களுக்கும் உடல்நலத்திற்கேற்ற உணவு கிடைக்கிறது. விவசாயிகளும் அதிக விளைச்சலுடன் லாபத்தையும் பெறுகின்றனர். முக்கியமாக நாம் நமது அடுத்த தலைமுறைக்கு மாசற்ற வேளாண் முறையைத் தருவதோடு ஆரோக்கியமான உணவுக்கும் வழிவகை செய்கின்றோம். 

 2. இயற்கை உணவுப் பொருள்களின் படங்களைத் திரட்டித் தொகுப்பேடு உருவாக்குக. 

Answer: மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும். 

 3. ‘இயற்கை உரம் பயன்படுத்துவோம், இனிமையாய் வாழ்வோம்’ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக. 

Answer: 

முன்னுரை : வளர்ந்துவரும் நவீனயுகத்தில் நாம் அனைவரும் இயற்கையை மறந்து செயற்கையைப் போற்றியதால் பல தீமைகளை எதிர்கொள்கிறோம். இந்நிலையை மாற்றுவதே இயற்கை வேளாண்மை. அதனைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். 

 மாசடைந்த நிலங்கள் : நல்ல விளைச்சல், பார்ப்பதற்குப் பெரிய பெரிய காய்கறிகள், கனிகள், குறுகிய காலத்தில் நிறைய இலாபம் இதனை மட்டுமே கருத்தில் கொண்டு செயற்கை உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தினோம். அதனால் வளம் இழந்தது மண் மட்டுமா? நாமும்தான். நீர்வளம், நிலவளம் குறைந்தது போல நமக்கும் புதிய புதிய நோய்கள் வந்து வலுவிழந்துவிட்டோம்.

  இயற்கை உரங்கள் : மண்புழுக்களை உற்பத்தி செய்து உரமாகப் பயன்படுத்துதல், கால்நடைகளின் சாணங்களை எருவாக்குதல், பண்ணையில் வளர்க்கப்படும் பறவை, விலங்குகளின் கழிவுகளை உரமாக்குதல், ஆமணக்கு, நிலக்கடலை, எள், பருத்தி, தேங்காய் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் பிண்ணாக்குகளை உரமாக்குதல். இவையனைத்தும் இயற்கை உரங்கள். இவற்றைப் பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்குவோம்.

 நன்மைகள் : இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால் விளைநிலங்களில் நன்மை செய்யும் பூச்சிகள், நுண்ணுயிரிகளின் எண்ணிக்கைபெருகுகிறது. பயிர்கள் நோய் எதிர்ப்புத்திறனைப் பெறுகின்றன. பயிர்கள் சத்துகளை எளிதாக எடுத்துக் கொள்கின்றன. பயிர்கள் சீராக விளைகின்றன. தரமான விளைச்சல் கிடைக்கின்றது. மிகவும் இன்றியமையாத நன்மை எதுவெனில் சுற்றுப்புறச் சூழல் தூய்மை ஆகிறது. உழவர்கள் உரங்களைத் தாங்களே தயாரிப்பதால் செலவும் குறைகிறது. 

 முடிவுரை : இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால் நல்ல சத்தான உணவுகள் கிடைக்கின்றன. அதனை உண்பதனால் நாம் நோயின்றி வாழலாம். ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம். 

  4. உங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள இயற்கை விதைப் பண்ணைகளுக்குச் சென்று, செய்தி திரட்டுக.

 Answer:  மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும். 

  5. உங்கள் பள்ளியில் நடைபெறும் ஏதேனும் ஒரு விழாவுக்கு மாதிரி அழைப்பிதழ்/துண்டு விளம்பரம் உருவாக்கி மகிழ்க. 

Answer: நேர்மை நிறைந்த தீர்ப்பு

மதிப்பீடு

 வினாக்களுக்கு விடையளிக்க. 

 1. அரசியிடம் கிராமத் தலைவர் கொண்டுவந்த வழக்கு யாது? 

Answer: அரசியிடம் கிராமத் தலைவர் கொண்டுவந்த வழக்கு: “செல்வந்தர் ஒருவர், அரிய சாதனை புரிபவருக்கு நூறு பொற்காசுகள் கொண்ட பொற்கிழி ஒன்றைப் பரிசளிப்பதாக அறிவித்து, அதனைப் பஞ்சாயத்தாரிடம் கொடுத்தார். அந்தப் பொற்கிழியைப் பெறுவதற்கு இவர்கள் நால்வரும் போட்டி போட்டனர். 

 நேர்மை நிறைந்த தீர்ப்பு 

 நால்வருடைய அரிய சாதனையைக் கேட்ட எங்கள் ஊர்ப் பஞ்சாயத்தினர், யாருடைய சாதனை சிறந்தது என்று முடிவு கட்ட முடியாமல், பரிசுத் தொகையை நால்வருக்கும் சரிசமமாகப் பிரித்துக் கொடுக்கலாம் என முடிவெடுத்தனர். ஆனால், இந்நால்வரும் அதற்கு உடன்பட மறுத்தனர். ஒவ்வொருவரும் தங்கள் சாதனையே பெரியது என்று கூறி, பரிசுத் தொகை முழுமையாகத் தங்களுக்கே சேர வேண்டும் என்றனர். அதனால், தாங்களே இவர்கள் செய்த சாதனையைக் கேட்டு விசாரித்து, பொற்கிழியை யாருக்குக் கொடுப்பது என்று சரியான தீர்ப்பளிக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொண்டார் கிராமப் பஞ்சாயத்து தலைவர். 

2. முருகேசன் தாம் என்ன சாதனை புரிந்துள்ளதாகக் கூறினார்? 

Answer: “நான் ஒரு வியாபாரி. மளிகைக் கடை வைத்துள்ளேன். வியாபாரத்தில் முழுக் கவனத்தோடு ஈடுபட்டிருந்தபோது, சிறுமி ஒருத்தி ஒருநாள் என் கடைக்கு வந்தாள். கடையில் சில பொருள்களை வாங்கினாள். நான் வேலையில் மும்முரமாக இருப்பதைக் கவனித்துவிட்டுப் பணம் கொடுக்காமல் நழுவப் பார்த்தாள். அப்போது தெருவில் வந்த மாடு, அவளை ஆவேசமாக முட்டுவதற்குப் போனது. நான் பாய்ந்துசென்று அவளைக் காப்பாற்றினேன். இத்தனைக்கும் அவள் தந்தைக்கும் எனக்கும் நிலத்தகராறு உண்டு. அடிதடிவரைகூடப் போய்விட்டோம். அப்படியிருந்தும் அவளை நான் காப்பாற்றினேன். அதைக் கண்ட ஊர்மக்கள் எல்லாரும் என்னைப் பாராட்டினார்கள். ஓர் உயிரைக் காப்பாற்றியது அதுவும் பகைவனின் மகளைக் காப்பாற்றியது பெரிய சாதனை இல்லையா? அதனால்தான் பொற்கிழியை எனக்கே கொடுக்க வேண்டும் என்கிறேன்” என்று சொன்னார் முருகேசன்.

3. விவசாயியின் சாதனைதான் உயர்ந்தது என்று அரசி கூறக் காரணம் என்ன?

 Answer: “முதியவரான விவசாயி, தமது ஒருகாணி நிலத்தில் மும்மடங்கு நெல் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளார். உண்மையில் இது பெரிய சாதனைதான். எந்த அளவிற்குப் பாடுபட்டு உழைத்திருந்தால், இந்த அளவு பலன் காண முடியும்! அவரது உழைப்பால், மேலும் பத்துக் குடும்பம்பங்களுக்குப் பயன் கிடைத்துள்ளது. விவசாயிகள் ஒவ்வொருவரும் இப்படிச் சாதனை செய்தால் நாட்டில் பஞ்சம், பசி இருக்காது; நோய்நொடி இருக்காது; வறுமையும் இருக்காது. எனவே, பொற்கிழி பெறத் தகுதியானவர் இவர்தாம். இவருக்கே பொற்கிழியை வழங்க ஆணையிடுகிறேன்” என்று நேர்மை நிறைந்த தீர்ப்பை அரசி வழங்கினார். 

 சிந்தனை வினா. 

 நண்பர்கள் உன்னை வீட்டில் வந்து சந்திக்கின்றனர். அவர்கள் சென்றபிறகு, பணப்பை ஒன்று நாற்காலியில் இருப்பதைக் காண்கிறாய். இந்நிலையில் நீ செய்யப்போவது என்ன ? 

அ) பணப்பையை உரியவரிடம் கொடுப்பேன் 

ஆ) உரியவரே தேடிக்கொண்டு வரட்டும் எனக் காத்திருப்பேன். 

இ) நான் பார்த்ததால், எனக்குத்தான் உரியது என வைத்துக்கொள்வேன். 

Answer: அ) பணப்பையை உரியவரிடம் கொடுப்பேன்.

  கற்பவை கற்றபின் 
பக்கம் -55

1. நேர்மையால் உயர்ந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்துகொள்க.

 Answer: மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும். 

2. நேர்மை நிறைந்த தீர்ப்பு கதையை நாடகமாக நடித்துக்காட்டுக

Answer: மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும்.அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி

மதிப்பீடு 
பக்கம் -58

 படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்! 

 அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக. 

 1. அடிபட்ட கால் ………………. என வலித்தது. 

அ) கடகட ஆ) விண்விண் இ) படபட ஈ) கணகண

Answer: ஆ) விண்விண் 

  2. காலைப்பொழுது ………………. வென புலர்ந்தது. 

அ) பலபல ஆ) தடதட இ) புலபுல ஈ) மளமள

 Answer: இ) புலபுல 

3. குயில் …………………….. எனக் கூவியது. 

அ) கீச்கீச் ஆ) கூகூ இ) கொக்கொக் ஈ) பக்பக் 

Answer: ஆ) கூகூ

4. மணமக்களை …………………….. என வாழ்த்தினர்.

 அ) வருக வருக ஆ) வாழ்க வாழ்க இ) வீழ்க வீழ்க ஈ) வளர்க வளர்க

 Answer:  ஆ) வாழ்க வாழ்க 

ஆ. பொருத்துக. 

1. கலகலவென – விரைவுக்குறிப்பு 

2. நறநறவென – ஒலிக்குறிப்பு

 3. தடதடவென – சினக்குறிப்பு 

Answer: 

1. கலகலவென – ஒலிக்குறிப்பு

 2. நறநறவென – சினக்குறிப்பு 

3. தடதடவென – விரைவுக்குறிப்பு 

 இ. கீழ்க்காணும் உரைப்பகுதியில் பொருந்துமாறு இரட்டைக் கிளவி/ அடுக்குத்தொடர்களைத் தேர்ந்தெடுத்து நிரப்புக.

அடர்ந்த காடு. ஒன்றையொன்று துரத்தி விளையாடிக்கொண்டிருந்த குரங்குகள், திடீரெனக் குரலெழுப்பியவாறு, ஒவ்வொரு மரமாக ஏறியும் இறங்கியும் கிளைக்குக் கிளை……………………… சென்றன. அவை எழுப்பிய ஓசையினால், பறவைகள் தத்தம் சிறகுகளைப் ………………………வென அடித்துக்கொண்டு பறந்தன. அருகிலிருந்த சிற்றாற்றில், நீர் ………………………வென ஓடிக்கொண்டிருந்தது. நீர்நிலை தேடிக் ………………………மாக வந்த யானைகள், அந்த ஆற்றைக்கண்டு, களிநடனமிட்டன. அருகில் வளர்ந்திருந்த தென்னை மரமொன்றிலிருந்த தேங்காய்கள், ……………………… எனக் கீழே விழுந்தன. அந்த ஓசையைக் கேட்டு, மிரண்ட யானைக்கன்று ………………………வென ஓட, அருகிலிருந்த மான்கள் அங்குமிங்கும் துள்ளித்துள்ளி ஓடின. சூல்கொண்ட மேகங்கள், ………………………வெனத் திரள, ………………………வென மின்னல் மின்னியது. சற்றுநேரத்தில்,………………………வென மழை பெய்ய, குரங்குகள் மரத்தின் மீது மடமடவென ஏறின. (தபதப, துள்ளித்துள்ளி , கூட்டங்கூட்டம், படபட, சலசல, சடசட, கருகரு, பளபள, மடமட, தாவித் தாவி, பொத்து பொத்து) 

Answer: அடர்ந்த காடு. ஒன்றையொன்று துரத்தி விளையாடிக்கொண்டிருந்த குரங்குகள், திடீரெனக் குரலெழுப்பியவாறு, ஒவ்வொரு மரமாக ஏறியும் இறங்கியும் கிளைக்குக் கிளை தாவித் தாவிச் சென்றன. அவை எழுப்பிய ஓசையினால், பறவைகள் தத்தம் சிறகுகளைப் படபடவென அடித்துக்கொண்டு பறந்தன. அருகிலிருந்த சிற்றாற்றில், நீர் சலசலவென ஓடிக்கொண்டிருந்தது. நீர்நிலை தேடிக் கூட்டங்கூட்டமாக வந்த யானைகள், அந்த ஆற்றைக்கண்டு, களிநடனமிட்டன. அருகில் வளர்ந்திருந்த தென்னை மரமொன்றிலிருந்த தேங்காய்கள், பொத்து பொத்து எனக் கீழே விழுந்தன. அந்த ஓசையைக் கேட்டு, மிரண்ட யானைக்கன்று தபதபவென ஓட, அருகிலிருந்த மான்கள் அங்குமிங்கும் துள்ளித்துள்ளி ஓடின. சூல்கொண்ட மேகங்கள், கருகருவெனத் திரள, பளபளவென மின்னல் மின்னியது. சற்றுநேரத்தில், சடசடவென மழை பெய்ய, குரங்குகள் மரத்தின் மீது மடமடவென ஏறின. (தபதப, துள்ளித்துள்ளி , கூட்டங்கூட்டம், படபட, சலசல, சடசட, கருகரு, பளபள, மடமட, தாவித் தாவி, பொத்து பொத்து) 

  கற்பவை கற்றபின் 
பக்கம் -57

 1. இரட்டைக்கிளவிகளைப் பயன்படுத்தித் தொடர்கள் எழுதுக.

 Answer: சிலுசிலு எனக் காற்று வீசியது. கமகம என மணந்தது முல்லை . மளமள என வேலையைச் செய்.

  2. உரைப்பகுதியில் காணப்படும் அடுக்குத்தொடர்களைத் தொகுத்து எழுதுக.

Answer: திரும்பத் திரும்ப வா வா பாம்பு பாம்பு போ போ 

 3. அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவி வருமாறு கற்பனைக் கதையொன்றை எழுதுக.

 Answer:  மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும். 

  மொழியை ஆள்வோம் 
பக்கம் -60

 அ. கேட்டல் :

 1. எளிய, இனிய ஓசைநயமிக்க பாடல்களைக் கேட்டு மகிழ்க. 

Answer: மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும். 

 2. உழவு வேலை நடைபெறும் இடங்களில் பாடப்படும் பாடல்களைக் கேட்டு மகிழ்க. 

Answer: மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும். 

 ஆ. பேசுதல் : 

  1. ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்னும் தலைப்பில் 5 மணித்துளி பேசுக.

 Answer: அனைவருக்கும் வணக்கம்! “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்று மகாகவி பாரதியார் உழவினை உயர்த்திப் பாடியுள்ளார். ‘உழவர்கள் சேற்றில் கால் வைக்கவில்லையென்றால் நாம் சோற்றில் கை வைக்க முடியாது’ இது அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய முதுமொழி. இவ்வாறு உழவர்களுக்கும், உழவுத்தொழிலுக்குப் பாடுபட்ட காளைமாடுகளுக்கும், வந்தனை செய்யும் விழாவே அறுவடைத் திருவிழா.

 இவையனைத்துமே உழவுத்தொழிலின் இன்றியமையாமையைப் பற்றிக் கூறுகிறது. ஆனால் இன்று நாகரிகம், நகரமயமாக்கல் என்றுசொல்லிக்கொண்டு விவசாய நிலங்களை அழித்து வீடுகளாக்கிவிட்டோம். இதனால் விளைநிலங்கள் குறைந்துவிட்டன. விவசாயமும் குறைந்துவிட்டது. இப்படியே இந்நிலை தொடர்ந்தால் நம் நிலை என்னவாகும் எனச் சிந்திக்க வேண்டும். உண்ண உணவு, உடை இவற்றை நமக்களிப்பதே உழவுத்தொழில்தான். இவையிரண்டும் நமக்கு அடிப்படைத் தேவைகள். அடிப்படைத் தேவையைக்கூட நம்மால் நிறைவு செய்து கொள்ள முடியாத நிலையே உண்டாகும். படித்த இளைஞர்கள் சேற்றில் கால் வைப்பதை இழிவாக எண்ணாமல் பெருமையுடன் செயலாற்ற வேண்டும். உழவுத்தொழிலை மேன்மையடைய செய்ய வேண்டும். இந்த உலகமே உழவர்களின் பின்தான் சுற்றுகிறது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். நன்செய், புன்செய் நிலங்களுக்கேற்ப மழையின் அளவிற்கேற்ப பயிர் செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பால் பருவமழைக்காலங்கள் மாறியதால், வேளாண்மைத் தொழில்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இம்மாற்றங்களை நமக்கேற்றதாக மாற்றிக் கொண்டு அதற்கேற்ற பயிர்களை விளைவிக்க வேண்டும். “தாளாற்றி தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு” என்று உழவரின் மாண்பினைப் போற்றுகிறது குறட்பா. உழவர்கள் பிறருக்கு அன்னமிடுவார்கள். ஒருபோதும் பிறரைச் சார்ந்து இருக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட உழவர்களையும் உழவுத்தொழிலையும் மதிப்போம். 

  2. நேர்மையாக வாழ்ந்தவர்களுள் யாரேனும் ஒருவரின் பண்புகளைப் பாராட்டிப் பேசுக. 

Answer: அனைவருக்கும் வணக்கம்! நேர்மையாக வாழ்ந்து புகழ்பெற்றவர் கக்கன். இவர் விடுதலைப் போராட்ட வீரர். தலைசிறந்த அரசியவாதியும் ஆவார். தமிழக அமைச்சரவையில் பத்தாண்டுகள் பணியாற்றியவர். ஐந்தாண்டுகள் லோக்சபா உறுப்பினராகவும் இருந்தவர். ஆனால் அவருக்கென்று ஒரு வீடுகூட இல்லை. வாழ்நாள் முழுவதும் வாடகை வீட்டில் வாழ்ந்தவர். அரசு பேருந்தில் பயணம் செய்தவர். பொதுவாழ்வில் தூய்மையும் நேர்மையும் செயல்திறனும் கொண்டு அரசுப் பணியை மக்கள் பணியாகச் செய்தவர். மதுரை மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் ஓராசிரியர் பள்ளியை நிறுவ முதல் 6 உத்தரவைப் பிறப்பித்தார். ஒருமுறை மலேசிய அமைச்சர், கக்கனைச் சந்தித்தார். அப்போது கக்கனின் கையில் இருந்த பழைய பேனாவைப் பார்த்தார். உடனே தனது பேனாவை அவருக்குத் தந்தார். அந்தத் தங்கப் பேனாவை வாங்க மறுத்த கக்கன், அந்தத் தகுதி தனக்கு இல்லை என்றார். அவர் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதில் வாங்கிக் கொண்டார். கக்கன், ஊழியரை அழைத்து அலுவலகப் புத்தகத்தில் பதிவு செய்ய ஏற்பாடு செய்தார். “இது அரசுக்கு அல்ல, உங்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்குத் தான் தந்தேன்’ என்று மலேசிய அமைச்சர் கூறியும் கக்கன் கேட்கவில்லை. கக்கன் “நான் அமைச்சராக இருப்பதால்தான் கொடுக்கிறீர்கள். இல்லையென்றால் கொடுப்பீர்களா? மக்களுக்குத் தொண்டாற்ற பொறுப்பேற்றுள்ள நம்மைப் போன்றவர்கள் பரிசுப் பொருட்களைச் சொந்த பயன்பாட்டிற்கு வைத்துக் கொள்ளக்கூடாது” என்றார். மலேசிய அமைச்சர் “உங்கள் சொந்த பயன்பாட்டிற்கு வைத்துக்கொள்ளாமல் அரசுப் பொருட்களோடு சேர்ப்பதாக இருந்தால் தரமாட்டேன்” என்று கூறினார். உடனே கக்கன் “அந்தத் தங்கப்பேனாவை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறித் திருப்பித் தந்துவிட்டார்.

  இதைப்போல பல உதவிகளை நேர்மையாகச் செய்தவர் கக்கன் அவர்கள். 

 இ. படித்தல் :

 1. செய்தித்தாளில் இடம்பெறும் வேளாண்மை பற்றிய செய்திகளை வகுப்பில் படித்துக்காட்டுக.

 Answer: மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும். 

 2. உங்கள் பள்ளியில் நடைபெறும் விழாவுக்குத் துண்டு விளம்பரத்தாள் தயாரித்து அனைவருக்கும் படித்துக்காட்டுக. 

Answer: மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும். 

 ஈ.. எழுதுதல். சொல்லக் கேட்டு எழுதுக. 

Answer: விதைத் திருவிழாவிற்குச் செல்வோம். இயற்கை வேளாண்மை அன்புடன் வரவேற்கிறது. நீர்வளத்தைப் பெருக்குவோம். மண்ணின் ஊட்டச்சத்து நீர் மேலாண்மை. ஆர்வலர்களைச் சுண்டியிழுக்கும் அரங்குகள். 

2. சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக. 

திருவிழா – …………………………………… 

இரசாயன விதை – …………………………………… 

விளம்பரப் பலகை – …………………………………… 

பழங்காலம் – ……………………………………

Answer: 

திருவிழா – திருவிழாவிற்குச் செல்வதென்றால் அனைவருக்கும் பிடிக்கும்.

 இரசாயன விதை – இரசாயன விதைகள் பயன்படுத்துவதால் மண்ணின் தன்மை கெடுகிறது.

 விளம்பரப் பலகை – விளம்பரப் பலகையைப் பார்த்துப் படித்தான் கந்தன்.

 பழங்காலம் – பழங்கால விவசாயத்தில் இயற்கை உரங்கள் பயன்படுத்தப்பட்டன. 

 3. ஒருபொருள் தரும் பல சொற்களை எழுதுக. 

 வயல் – செய், கழனி 

உழவு – …………….. , ……………………… 

மகிழ்ச்சி – …………….. , ……………………… 

வீடு – …………….. , ……………………… 

பேசு – …………….. , ……………………… 

Answer: 

வயல் – செய், கழனி 

உழவு – ஏர், வேளாண்மை

 மகிழ்ச்சி – இன்பம், 

களிப்பு வீடு – மனை, 

இருப்பிடம் பேசு – சொல், செப்பு

 4. கீழ்க்காணும் உரைப்பகுதியைப் படித்து, வினாக்களுக்கு விடை எழுதுக.
பக்கம் -61

 நீர்வளமும் நிலவளமும் உடைய தமிழ்நாட்டில் பண்டைக் காலத்திலிருந்தே பயிர்த்தொழில் சிறந்ததாகக் கருதப்பட்டது. முற்காலத் தமிழர் தொழுதுண்டு வாழ விரும்பினார் அல்லர்; உழுதுண்டே வாழவே விரும்பினார்கள். “சீரைத் தேடின் ஏரைத் தேடு’ என்றார் ஒரு புலவர். ஏர்த்தொழில் இனிது நடைபெறுவதற்கு மழை இன்றியமையாதது. தாய் முகம் காணாப் பிள்ளையும் மழை முகம் காணாப் பயிரும் செழிப்படைவதில்லை. ஆகவே, தமிழ்நாட்டார் வானத்திலே தவழும் மேகத்தையே நோக்கி வாழ்ந்தார்கள். உயர்ந்து ஓங்கிய மலைகளில் மேகம் தவழக் கண்டால் தமிழர் உள்ளம் தழைக்கும்; கார்மேகத்தின் இடையே மின்னல் வீசக் கண்டால் அவர் உள்ளம் துள்ளி மகிழும். 

1. பண்டைக்காலத்திலேயே சிறந்ததாகக் கருதப்பட்ட தொழில் எது?

 Answer:  பண்டைக்காலத்திலேயே சிறந்ததாகக் கருதப்பட்ட தொழில் பயிர்தொழில். 

 2. முற்காலத் தமிழர் எப்படி வாழ விரும்பினர்?

 Answer:  முற்காலத் தமிழர் உழுதுண்டு வாழவே விரும்பினார்கள். 

 3. ஏர்த்தொழில் இனிது நடைபெற எது தேவை? 

Answer: ஏர்த்தொழில் இனிது நடைபெறுவதற்கு மழை இன்றியமையாதது.

 4. தமிழர் உள்ளம் துள்ளி மகிழக் காரணம் என்ன? 

Answer:  கார்மேகத்தின் இடையே மின்னல் வீசக் கண்டால் தமிழர் உள்ளம் துள்ளி மகிழும்.

  5. மழையுடன் தொடர்புடைய சொற்களை எழுதுக. 

Answer:  மேகம், மின்னல். 

 5. கீழ்க்காணும் பாடலைப் படித்து மகிழ்க.

 Answer: நீர் மேலாண்மை ஆத்திசூடி அகலத் தூறிடு ஆழ்துளை நீக்கு இருகரை சமன்செய் ஈராறு இணை உப்புநீர் வடி ஊற்றுநீர் பெருக்கு எரிபொருள் சேமி ஏரியைக் காத்தல் செய் ஐம்பொறி அழுக்கறு ஒன்றாக்கு நீர்நிலை ஓங்கிடும் உலகெலாம் ஓளடதம் நீர். 

  மொழியோடு விளையாடு 
பக்கம் -62

 உழவுத் தொழிலுடன் தொடர்புடைய பழமொழிகளின் சொற்கள் இடம் மாறியுள்ளன. அவற்றை முறைப்படுத்தி எழுதுக.

 1. பட்டம், தேடி, ஆடிப், விதை, – ஆடிப்பட்டம் தேடி விதை

 2. தேடு, ஏரைத், தேடின், சீரைத் – …………………………………………………………… 

3. உழுவதை, அகல, விட, உழு, ஆழ – …………………………………………………………… 

Answer: 

1. பட்டம், தேடி, ஆடிப், விதை, – ஆடிப்பட்டம் தேடி விதை

 2. தேடு, ஏரைத், தேடின், சீரைத் – சீரைத் தேடின் ஏரைத் தேடு. 

3. உழுவதை, அகல, விட, உழு, ஆழ – அகல உழுவதைவிட ஆழ உழு. 

 2. கீழ்க்காணும் பாடலிலுள்ள தொகைச்சொற்களை விரித்து எழுதுக.

 இருவினை – நல்வினை, தீவினை

 முத்தமிழ் – ………….., …………………., ………………… 

நாற்றிசை – ………….., …………………., ………………… , …………….. 

ஐந்திணை , – ………….., …………………., …………………, …………….., ……………………. , ………………….. 

அறுசுவை – ………….., …………………., …………………, …………………, ……………… , ………………..

Answer: 

இருவினை அறிந்து கொள்வோமே! 

முத்தமிழ் கற்றுத் தேர்வோமே!

 நாற்றிசை தேடிச் செல்வோமே! 

ஐந்திணை சுற்றி வருவோமே! 

அறுசுவை உண்டு மகிழ்வோமே! 

 இருவினை – நல்வினை, தீவினை 

முத்தமிழ் – இயல், இசை, நாடகம் 

நாற்றிசை – கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு 

ஐந்திணை , – குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல், பாலை 

அறுசுவை – இனிப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு 

  3. குறிப்புகளைப் படித்துத் ‘தை’ என முடியும் சொற்களை எழுதுக.

  1. மெதுவாக ஊர்ந்து செல்லும் ஓர் உயிரி 
2; பொதி சுமக்கும விலங்கு 
3. பகலில் கண் தெரியாப் பறவை
 4. காய், கனியில் இருக்கும் 

Answer: 
1. மெதுவாக ஊர்ந்து செல்லும் ஓர் உயிரி – நத்தை
2; பொதி சுமக்கும விலங்கு – கழுதை நத்தை
 3. பகலில் கண் தெரியாப் பறவை – ஆந்தை 
4. காய், கனியில் இருக்கும் – விதை

 4. கீழ்க்காணும் தொடரைப் பல தொடர்களாக மாற்றுக. 

  1. மணமலர் படம் வரைந்தாள். 

Answer: 

அ) மணமலர் படம் வரைந்தாளா? 

ஆ) மணமலரா படம் வரைந்தாள்?

 இ) மணமலர் படம் வரை

 ஈ) மணமலர் படம் வரைவாயா? 

  2. கதிரவன் வீட்டுக்குச் சென்றான். 
பக்கம் -63

அ) ………………………. 

ஆ) ……………………….

இ) ………………………. 

ஈ) ………………………. 

Answer: 

அ) கதிரவன் வீட்டுக்குச் சென்றானா? 

ஆ) கதிரவனா வீட்டுக்குச் சென்றான்? 

இ) கதிரவா வீட்டுக்குச் செல். 

ஈ) கதிரவா வீட்டுக்குச் செல்வாயா? 

 5. புதிய சொற்களை உருவாக்குக.

 1. விளையாட்டுத் திடல் – விளை, விளையாட்டு, திடல், விடல், விடு, விடுதி, வில்.

 2. பல்கலைக்கழகம் – ………………………. 

3. கவிதைத்திரட்டு – ………………………. 

Answer: 

1. விளையாட்டுத் திடல் – விளை, விளையாட்டு, திடல், விடல், விடு, விடுதி, வில்.

 2. பல்கலைக்கழகம் – பல்கலை, கழகம், பல், கல், கலை, பக்கம், பழக்கம். 

3. கவிதைத்திரட்டு – கவிதை, திரட்டு, விதை, கவி, தை, விரட்டு, கட்டு, விட்டு.

  6. பாடலைத் தொடர்ந்து பாடி மகிழ்க. 

Answer: 

நிற்க அதற்குத் தக 
பக்கம் -64

 1. உழவின் மேன்மையை அனைவருக்கும் உணர்த்துவேன். 

2. இயற்கை உரங்களின் பயன்களைச் சொல்வேன் 

3. மழைவளம் பெருக மரம் வளர்க்க உதவுவேன்.


  செயல் திட்டம்

1. உழவு தொடர்பான படம் ஒன்றை வரைந்து வண்ணம் தீட்டுக.

Answer: மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும். 

  2. உழவு தொடர்பான பாடல்களுள் ஐந்து எழுதி வருக. 

Answer: மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும்.

PREPARED BY THULIRKALVI TEAM 

No comments:

Post a Comment