அஞ்சல் வார விழா கட்டுரைப்போட்டி - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Sunday 10 October 2021

அஞ்சல் வார விழா கட்டுரைப்போட்டி

அஞ்சல் வார விழா கட்டுரைப்போட்டி 



அஞ்சல் வார விழாவையொட்டி நடத்தப்படும் கட்டுரைப்போட்டிக்கு மாணவர்களிடமிருந்து கட் டுரைகள் வரவேற்கப்படுகின்றன. புதுச்சேரி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப் பாளர் சிவபிரகாசம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: 

இந்திய அஞ்சல் துறை சார்பில் 9.10.2021 முதல் 16.10.2021 வரை அஞ்சல் வார விழா கொண்டா டப்படுகிறது. வரும் 13 ம்தேதி சிறப்பு அஞ்சல்தலை தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, 18 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் கட்டுரை போட்டி நடத்தப்படுகிறது. இந்திய அஞ்சல் துறைமூலம் புதுச்சேரி சிறப்பம்சங்கள் பற்றி வெளியிடப்பட் டுள்ள அஞ்சல் தலை மற்றும் சிறப்பு அஞ்சல் உறை என்ற தலைப்பில் 1000 வார்த்தைகள் மிகாமல் ஏ-4 பேப்பர் எழுதி, முதுநிலை அஞ்சல் கோட்ட கண்கா ணிப்பாளர், புதுச்சேரி கோட்டம், புதுச்சேரி-605001 என்ற முகவரிக்கு விரைவு அஞ்சல் மூலம் வரும் 13ம் தேதி மாலை 5மணிக்குள் அனுப்பி வைக்கலாம்.

No comments:

Post a Comment