தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு குறித்து வெளியிட்டுள்ள முக்கிய செய்தி குறிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 15 February 2025

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு குறித்து வெளியிட்டுள்ள முக்கிய செய்தி குறிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எண்.3, தேர்வாணையச் சாலை, சென்னை-600 003 

செய்தி வெளியீடு 

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்) (அறிவிக்கை எண்.07/2024) பணிகளில் அடங்கிய பல்வேறு கணக்கு அலுவலர் (பதவி எண்கள்: 2093, 3335, 3299, 3341, 3337 மற்றும் 3339) மற்றும் சட்ட அலுவலர் (பதவி எண்கள்: 3311, 3312, 3338 மற்றும் 3259) பதவிகளின் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு வரும் 19.02.2025 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், எண்.3, தேர்வாணையச் சாலை (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்), சென்னை. 600 003 ல் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மேற்குறிப்பிட்ட கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ள தேர்வர்களின் தரவரிசைப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. 

மேற்குறிப்பிட்ட கலந்தாய்விற்கான நாள், நேரம் மற்றும் இதர விவரங்கள் அடங்கிய அழைப்பாணையினை தேர்வர்கள் தேர்வாணைய இணையதளமான (www.tnpsc.gov.in)-லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கலந்தாய்விற்கு அழைக்கப்படும் தேர்வர்களுக்கு அதற்கான விவரம் குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (E-mail) வாயிலாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கு குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்துகொள்ளத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்ட அனைத்து தேர்வர்களும் தெரிவு செய்யப்படுவார்கள் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment