கரோனா தடுப்புப் பணி: தற்காலிக பணியாளர்கள் தேவை - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Wednesday 21 July 2021

கரோனா தடுப்புப் பணி: தற்காலிக பணியாளர்கள் தேவை

கரோனா தடுப்புப் பணி: தற்காலிக பணியாளர்கள் தேவை 

புதுக்கோட்டை/ பெரம்பலூர், ஜூலை 20: புதுக்கோட்டை மாவட்ட மருத் துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநரின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்புப்பணிக்கு மருத்துவம் சாரா பணியிடங்கள் (மருந்தாளுநர் - 10, நுண்கதிர் வீச்சாளர் - 10 மற்றும் ஆய்வக நுட்புநர் - 10) பட்டய படிப்பு 2 ஆண்டுகள் முடித்தவர்களிடமி ருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முற்றிலும் ஆறு மாத தற் காலிக பணி இது. வரும் காலங்களில் பணிவரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது. 

மாதம் ரூ.12,000 ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள், பழைய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகம், சாந்தநாதபுரம் 1-ஆம் வீதி, புதுக்கோட்டை 622001 என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். 

கடைசி நாள் ஜூலை 28. நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் ஜூலை31. பெரம்பலூர்: மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் கரோனா நோய்த் தடுப்பு பணிகளுக்காக மருந்தாளுநர்கள், ஆய்வக நுட்புநர்கள், நுண் கதிராளர்கள் பிரிவுகளில் தலா 7 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. உரிய சான்றுகளுடன் நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவ லகம், அரசுத் தலைமை மருத்துவமனை வளாகம், பெரம்பலூர்- 621212 என்ற முகவரியில் வரும் 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நேர்காணல் ஜூலை 29-ஆம் தேதி நடைபெறும். SOURCE NEWS

No comments:

Post a Comment