கண்களில் ஸ்ட்ரெஸ் காரணம் என்ன? சரி செய்வது எப்படி? - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Sunday 6 June 2021

கண்களில் ஸ்ட்ரெஸ் காரணம் என்ன? சரி செய்வது எப்படி?



மனித உடல் உறுப்புகளில் மிகவும் மென்மை யானது கண். உடலில் ஏற்படும் பல்வேறு நோய்கள், சம்பந்தப்பட்ட உறுப்புகளை பாதிப்ப தோடு அல்லாமல், பல நேரங்களில் கண்களையும் பாதிப்பதுண்டு. அதனால், நாம் கண்களை மாக பாதுகாக்கவேண்டும். 

கண்களுக்கென்று பிரத் யேகமாக ஓய்வு கொடுக்க வேண்டும். பொதுவாக கண்களை தூரப்பார்வைக்கு மட்டுமே பயன்படுத்து வது நல்லது. நம்மில் பெரும்பாலோனோர் நீண்ட நேரம் செல்போன் பார்ப்பதை வழக்கமாகக் கொண் டிருக்கிறோம். இப்படி நீண்டநேரமாக செல்போனை கண்களுக்கு அருகே வைத்துப் பார்ப்பதால், அதன் கதிர்வீச்சுகளால் கண்கள் வெகுவாகப் பாதிக்கப்படு கிறது. 

MOST READ 


கம்ப்யூட்டர், லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் சாத னங்களில் வேலை செய்பவர்கள் தினமும் 12 முதல் 16 மணி நேரம் வரை தொடர்ந்து அவற்றைப் பயன் படுத்துகின்றனர். இதுபோன்று நீண்டநேரம் அவற் றைப் பயன்படுத்துவதால், அவற்றிலிருந்து வெளியா கும் கதிர்வீச்சுகள் கண்களை வெகுவாகப் பாதிக் கின்றன. கூடவே, இலவச இணைப்பாக தலைவலி, கண்வலி போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்து கின்றன. 

செல்போன், லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் சாத னங்களைப் பயன்படுத்தும்போது அவற்றிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சுகள் கண்களில் உள்ள விழி வெண்படலம் மற்றும் சிலியரி தசைகளை பெருமள வில் பாதிக்கின்றன. சாதாரணமாக நாம் ஒரு நிமிடத் தில் பலமுறை கண்களை சிமிட்டுவோம். ஆனால், செல்போனை பார்த்துக்கொண்டிருக்கும்போது குழந் தைகள் கண்களை இமைக்க மறந்துவிடுகின்றனர். கூடவே இரண்டு, மூன்று நிமிடங்கள் கூட கண்களை இமைக்காமல் செல்போனை கூர்ந்து நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். 


இதுபோன்று நீண்டநேரம் பார்ப்பதால் கண்ணின் விழி வெண்படலத்துக்கு மேலுள்ள ஈரப்பதம் வறட்சி யடைந்து கண்களில் எரிச்சல், நீர் வடிதல், அழுத்தம் போன்றவை ஏற்படும். கூடவே கண்கள் சிவந்து தலைவலியும் ஏற்படும். இதுபோன்ற பாதிப்புகளி லிருந்து தற்காத்துக்கொள்ள செல்போன், ஐபேட், லேப்டாப் போன்ற கேட்ஜெட்டுகளை குறைந்தபட்சம் 30 செ.மீ தொலைவில் வைத்துப் பார்ப்பது நல்லது. 

இவற்றை அதிக வெளிச்சத்திலோ, மிகக் குறைவான வெளிச்சத்திலோ வைத்துப் பார்க்காமல் மீடியமான வெளிச்சத்தில் வைத்துப் பயன்படுத்த வேண்டும். 20 நிமிடத்துக்கு மேலாக தொடர்ந்து இந்த கேட்ஜெட்டு களைப் பயன்படுத்தக்கூடாது. செல்போன் உள்ளிட்ட கேட்ஜெட்டுகளை பயன்படுத்தும்போது சிறிது இடை வெளி விட்டு பசுமையான இடங்களைப் பார்க்க வேண்டும். இப்படி செய்வது சிலியரி தசைகளுக்கு நல்லது. 

கண்களில் ஏற்படும் ஸ்ட்ரெஸ்ஸை போக்க சில ஆலோசனைகள்: 

🔷 சிறிது நேரம் கண்களை மூடி இமைகள் மீது ஒரு துண்டு வெள்ளரிக்காயை வைக்கலாம். 

🔷 கண் சொட்டு மருந்தை பயன்படுத்தலாம். 

🔷 கம்ப்யூட்டர், லேப்டாப் போன்றவற்றில் எழுத்துக் பெரிதுபடுத்திக் கொள்ளலாம். தெளிவாக தெரியும் எளிமையான எழுத்து வகைகளைப் பயன் படுத்தலாம். 

🔷கணினியின் திரை கண்பார்வைக் கோட்டிற்கு கீழே அமையும்படி பார்த்துகொள்ள வேண்டும். 

🔷கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும்போது சிறு சிறு இடைவேளைகள் எடுத்துக்கொள்வது மிகவும் அவசி யம் 

🔷 ஏ.சி. இருந்தால், அது முகத்தில் படும்படி அமரக்கூடாது. 



மேஜை விளக்குகளைப் பயன்படுத்தலாம். களை

No comments:

Post a Comment