நாடு முழுவதுமுள்ள உயர்கல்வி
நிறுவனங்களில் முதுநிலை உயிரி தொழில்நுட்பம் படிப்புகளில் (பயோ டெக்னாலாஜி)
சேருவதற்கு கேட்-பி என்ற தேசிய நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த
தேர்வுகள் ஆண்டுதோறும் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் நடத்தப்பட்டு
வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான கேட்-பி தேர்வு கணினி வழியில் ஏப்ரல் 20-ம் தேதி
காலை 10 முதல் 1 மணி வரை நடத்தப்படவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு தற்போது
தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் https://dbt2025.ntaonline.in/
என்ற இணையதள வழியாக மார்ச் 3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வுக்
கட்டணமாக பொதுப்பிரிவுக்கு ரூ.1,300-ம், எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.650-ம் செலுத்த
வேண்டும். இதுதவிர விண்ணப்பங்களில் ஏதும் திருத்தங்கள் இருப்பின் மார்ச் 5, 6-ம்
தேதிகளில் மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். மேலும், தேர்வுக்கான பாடத்திட்டம்,
தகுதிகள், வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை /www.nta.ac.in/ என்ற வலைத்தளத்தில்
அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு
கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில்
கூறப்பட்டுள்ளது.
Post a Comment