பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.02.2025
திருக்குறள்:
பால்:பொருட்பால் அதிகாரம்: பெருமை குறள்எண் :972 பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும்;
சிறப்புஓவ்வா செய்தொழில் வேற்றுமை யான்.
பொருள்:
அனைத்து மக்களுக்கும் பிறப்பு ஒத்திருந்தாலும், செய்கின்ற செயல் வேற்றுமையால்
பெருமை சிறுமை என்று இயல்புகள் வேறுபடும்.
பழமொழி :
தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது. To cheat one that has come for protection
is bad.
இரண்டொழுக்க பண்புகள் :
என்னிடம் உள்ள பொருட்களைப் பற்றி பெருமை பேச மாட்டேன்.
என்னிடம் இல்லாத
பொருட்களை எண்ணி ஏக்கம் கொள்ள மாட்டேன்.
பொன்மொழி :
ஒரு முள் குத்திய அனுபவம் காடளவு எச்சரிக்கைக்கு சமம். --திரு. வோயாஸ்--
பொது அறிவு :
1. உலகின் இரண்டாவது உயரமான சிகரம் எது? விடை :காட்வின் ஆஸ்டின் 2. தமிழ்நாட்டின்
முக்கிய இழை பயிர் எது? விடை : பருத்தி
English words & meanings :
Church. - தேவாலயம் Castle. - கோட்டை
வேளாண்மையும் வாழ்வும் :
அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய
சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும்
செய்தனர்..
நீதிக்கதை வெப்பமும் குளிர்ச்சியும்
காலையில் கதிரவன் தோன்றினான். தன் ஒளியைப் பரப்பி உலகம் முழுவதும் உள்ள இருளை
விலகச் செய்தான். கடல் நீர்ப்பரப்பின் மீதும் அவன் கதிர்கள் விரிந்தன. கடலை
அழகுபடுத்த வேண்டும் என்று கதிரவன் தன் ஒளியை மேன்மேலும் அதன் மீது
பாய்ச்சினான். வெப்பத்தைத் தாங்க முடியாமல் கடல் முகம் சுருங்கியது. அதன்
அலைகள் தளர்ச்சியடைந்து சிறுத்தன. தான் அன்போடு கதிர் பாய்ச்சிக் கடலை
அழகுபடுத்த முயலும்போது, அது ஏன் முகத்தைச் சுருக்கிக் கொள்கிறது? என்று
கதிரவனுக்குப் புரியவில்லை. “கடலே, என்ன கோபம்?'” என்று கேட்டான்.கடல் பதில்
பேசவில்லை. பதில் சொல்லக் கூட விருப்பமில்லாத அளவு தன் மீது கடல் கோபமாய்
இருக்கக் காரணம் என்ன? என்று சிந்தித்தான் கதிரவன். அப்போது அந்தப் பக்கமாக
காற்றரசன் வந்தான். கதிரவன் சிந்தனையைக் கண்டு காரணம் கேட்டான். கடலின்
போக்கைப்பற்றிக் கதிரவன் கூறினான். அதைக் கேட்டபின் காற்றரசன் சொன்ன செய்தி
கதிரவனை மேலும் துன்பப்படச் செய்தது. “நீ வரும்போதுதான் கடல் தன் அலைகளைச்
சுருக்கிக் கொள்கிறது. இரவில் நிலவரசன் வரும்போது எவ்வளவு மகிழ்ச்சி .
கொள்ளுகிறது தெரியுமா ? பொங்கிப் பொங்கி அலைகளை உயரச் செலுத்தி ஆனந்தம்
கொள்ளுகிறது.உன்னுடைய நட்பை அது விரும்பவில்லை. நிலவரசனைத்தான் அது
விரும்புகிறது?” என்று காற்றரசன் கூறினான். மறுநாள் நிலவரசன் பகலிலேயே
வெளியில் வந்தான். கடல் அலைகளைப் பெரிதாக்கிக் கொண்டது. கதிரவன் நிலவரசனை
நேருக்கு நேரே பார்த்தான். "நிலாத்தம்பி, இந்த கடல் உன்னைக் கண்டு பொங்குவதும்
என்னைக் கண்டு. பொங்காததும் ஏன் ?” என்று கதிரவன் கேட்டான். “அண்ணா, என்
கதிர்கள் குளிர்ச்சியாயிருப்பதால் கடலுக்கு மகிழ்ச்சியளிக்கின்றன. அதனால்
ஆனந்தமாகப் பொங்குகிறது. உன் கதிர்கள் வெப்பமாக இருப்பதால் சூடு தாங்காமல்
சுருங்குகிறது?” என்றான் நிலவரசன். காரணமறிந்த கதிரவன் மேற்கொண்டு எதுவும்
பேசவில்லை. கருத்துரை:-- இனிய சொற்களே மகிழ்ச்சியைத் தரும். கடுஞ்சொற்கள்
மகிழ்ச்சியைத் தராது.
இன்றைய செய்திகள் 19.02.2025
வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளை 9 சிறந்த கைவினைஞர்களுக்கும், பூம்புகார்
மாநில விருதுகளை 9 சிறந்த கைவினைஞர்களுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி
சிறப்பித்தார்.
போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்ற ஆசிரியர்களின் சான்றிதழ்கள்
ரத்து செய்யப்படும். புதிய ஆசிரியர்கள் நியமனத்துக்கு காவல் துறை சரிபார்ப்பு
சான்று பெறுவது கட்டாயமாக்கப்படும் என்று தலைமைச் செயலர் முருகானந்தம்
அறிவித்துள்ளார்.
புதிய தேர்தல் ஆணையராக 1989-ம் ஆண்டு பேட்ச் இந்திய ஆட்சிப்
பணி அதிகாரியான ஹரியானாவைச் சேர்ந்த விவேக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளதாக சட்ட
அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தேவைப்பட்டால் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன்
பேச்சுவார்த்தை நடத்த அதிபர் புதின் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி: ஸ்பெயின் வீரர் அல்காரஸ் 2-வது சுற்றுக்கு தகுதி.
3-வது ஒருநாள் போட்டி: அயர்லாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஜிம்பாப்வே.
Today's Headlines
Tamil Nadu Chief Minister M.K. Stalin awarded the "Living Crafts Tradition
Award" to 9 skilled craftsmen and the "Poompuhar State Award" to 9 skilled
craftsmen.
The certificates of teachers who were punished in the POCSO cases
will be cancelled. Henceforth, police verification certificates will be made
mandatory for new teacher appointments, announced Chief Secretary Muruganandam.
Vivek Joshi, a 1989-batch Indian Administrative Service officer from Haryana,
has been appointed as the new Election Commissioner, announced by Ministry of
Law.Russia has expressed its readiness to hold talks with Ukrainian President
Zelensky if necessary.
Qatar Open Tennis Tournament: Spanish player Alcaraz
qualifies for the 2nd round.
3rd One-Day Match: Zimbabwe wins the series by
defeating Ireland.
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment