முகப்பொலிவை மேம்படுத்தும் வழிமுறைகள் - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Sunday 26 September 2021

முகப்பொலிவை மேம்படுத்தும் வழிமுறைகள்

சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்கள், சுற்றுச்சூழல் மாசுபாடு, எதிர்மறையான வாழ்வியல் மாற்றங்கள், முறையற்ற உணவுப் பழக்கம், ஹார்மோன்களின் சீரற்ற சுரப்பு போன்றவை சருமத்தில் பாதிப்பை உண்டாக்குகின்றன. இதன் மூலம் முகத்தில் கரும்புள்ளி, முகப்பரு, தோல் சுருக்கம், சரும நிறம் மாற்றம் ஆகிய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. 


இவற்றுக்கு இயற்கையான முறையில் தீர்வு காண முடியும். அன்றாடம் பயன்படுத்தும் எளிமையான பொருட்களைக் கொண்டு முகப் பொலிவை அதிகரிக்கும் வழிமுறைகளை இங்கு காண்போம். கற்றாழை, புற ஊதாக் கதிர்களின் பாதிப்பில் இருந்து சருமத்தை பாதுகாப்பதோடு, சுருக்கங்கள் ஏற்படாமலும் தடுக்கும் திறன் கொண்டது. ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், சம அளவு தேன் கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், முகம் பொலிவடையும். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் 'சி' சருமத்தை இளமையாக வைத்திருப்பதற்கு உதவும். இதில் இருக்கும் 'சிட்ரிக் அமிலம்' முகத்தில் படர்ந்திருக்கும் கருமையை நீக்கும் திறன் கொண்டது. 

ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறுடன், சம அளவு தயிர் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் பளிச்சிடும். இந்த கலவையை வெயில் பட்டு கருத்த இடங்களிலும் பூசலாம்.2 டீஸ்பூன் முட்டைகோஸ் சாற்றுடன், ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து நீரால் கழுவி விடலாம். 

இதன் மூலம் முகத்தில் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கலாம்; மென்மையான, பளபளப்பான சருமத்தைப் பெறலாம். 1. தேக்கரண்டி கசகசா, 3 கிராம்பு, 45 ஜாதிக்காய் இந்த மூன்றையும் சிறிதளவு பால் ஊற்றி அரைக்க வேண்டும். இந்த விழுதை முகத்தில் உள்ள கரும் புள்ளி மற்றும் முகப்பருவால் ஏற்பட்ட வடுக்களின் மீது பூச வேண்டும். 20 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 20 நாட்கள் செய்து வந்தால் முகம் பளபளக்கும். குப்பைமேனி இலைச் சாறு 2 தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் தூள் 4 தேக்கரண்டி, எலுமிச்சைச் சாறு 4 தேக்கரண்டி, ரோஜா பன்னீர் - தேக்கரண்டி, கற்றாழைச் சாறு 1 தேக்கரண்டி, தேன் 4 தேக்கரண்டி கலந்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் ஊறவைத்துப் பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். 

இதைத் தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளி நீங்கும். முகப்பருக்கள் உண்டாகாது. குப்பைமேனி சருமத்தில் உள்ள சுருக் கத்தை நீக்கி முகத்தை இளமையாக்கும். முகப் பருவால் ஏற்பட்ட தழும்புகளை நீக்கும். குப்பை மேனியைப் பச்சையாகவோ அல்லது நிழலில் உலர்த்திப் பொடி செய்தோ பயன்படுத்தலாம். நாட்டு மருந்து கடைகளிலும் குப்பைமேனி பொடி கிடைக்கும்.

No comments:

Post a Comment