தபால் சேமிப்பு திட்ட பண பரிவர்த்தனைக்கு டெபாசிட்டர் நேரில் வர முடியாத போது, மூன்றா வது நபரை, மெசெஞ்சராக பயன்படுத்தப்பட்டு வந்தனர். சமீபத்தில் தபால்துறை இதனை ரத்து செய்திருந்தது. இந்நிலையில், "மெசெஞ்சர் சேவையை பயன் படுத்திக்கொள்ள, மீண்டும் தாபல்துறை அனுமதி வழங்கியுள்ளது. 

டெபாசிட்டர் தனது கணக்கி விருந்து பணம் எடுத்தல், கணக்கினை முடித்து கொள்ளுதல் ஆகியவற்றிற்கு, இவ்வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கென புதிதாக, 'பார்ம் - 12' என்ற அனு மதி படிவம் வழங்கப்படவுள்ளது. இந்த படிவத் தின் மூலமாக, எழுதபடிக்க தெரிந்த நபர் ஒருவரை மட்டும், மெசெஞ்சர் ஆக பயன்படுத்த முடியும். மெசெஞ்சராக நியமிக்கப்படுபவர், கே.ஒய்.சி., சமர்ப்பிப்பதுடன், அவரின் கையெழுத்தினை, டெபாசிட்டர் உறுதி செய்ய வேண்டும் என, அஞ்சல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

أحدث أقدم