தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரையிலான காலக்கட்டங்களில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப் பயன்களின் நிலுவைத் தொகையான ரூ.497.32 கோடியினை 2 ஆயிரத்து 457 ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக, 6 ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவைத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தலைமைச்செயலாளர் இறையன்பு, போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, முதன்மை நிதி அலுவலர், மாநகர் போக்குவரத்து கழகம் மற்றும் அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post