கல்பாக்கம் அணுசக்தி துறை பணிகள் விண்ணப்ப நாள் நீடிப்பு - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Monday 7 June 2021

கல்பாக்கம் அணுசக்தி துறை பணிகள் விண்ணப்ப நாள் நீடிப்பு



அணுசக்தி துறை பணிகளுக்கு, இணைய விண்ணப்ப நாள் நீட்டிக்கப் பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் அணுசக்தி துறையின் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் இயங்குகிறது. 

இம்மைய அறிவியலாளர், தொழில்நுட்பவியலாளர், கிரேன் ஆப்பரேட்டர், ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட பணியாளர்கள், உதவித்தொகை பயிற்சியாளர்கள் என, 239 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.

இம்மையத்தின், www.igcar.gov.in என்ற இணையதளத்தில், விண்ணப்பம் பதிவிறக்கி, மே 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும், பின், 3ம் தேதி வரை நீட்டித்தும் அறிவிக்கப்பட்டது. கொரோனா தொற்று தடுப்பு ஊரடங்கு சூழலில், குறித்த நாளிற்குள் விண்ணப்பிக்க சிரமம் ஏற்பட்டதால், விண்ணப்ப இறுதிநாளை நீட்டிக்க, நிர்வாகம் முடிவு செய்தது. 

இதையடுத்து, இம்மாதம், 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, நிர்வாகம் அறிவித்துள்ளது.இதற்கிடையே, பணி நியமனத்தில், இட ஒதுக்கீடு, வெளிப்படைத்தன்மையை பின்பற்ற, திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி, அந்நிர்வாகத்திடம் வலியுறுத்தி, இ - மெயில் கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். SOURCE NEWS 

No comments:

Post a Comment