கேரளாவில் அரசு உதவி பெறும் ஆசிரியர்கள் அரசியலில் ஈடுபட நீதிமன்றம் தடை 


திருவனந்தபுரம், பிப்.26: 

கேரளாவில் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், தேர்தலில் போட்டியிடுவதுடன் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதை எதிர்த்து ஜிபு தாமஸ் என்பவர் கேரள உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அரசியலில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் கள் தேர்தலில் போட்டியிடுவது மற்றும் பிரசாரங்களில் ஈடுபடுவதற்கு தடையில்லை. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அரசியலில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்த மனு தலைமை நீதிபதி மணி குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பின் நீதிபதி அளித்த தீர்ப்பில், 'அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது, மேலும், உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அர சியலில் ஈடுபட அனுமதி அளித்தது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும் கூறியுள்ளார்.




Post a Comment

أحدث أقدم