முதல்-அமைச்சர் வீட்டு முன்பு ஆசிரியர்கள் போராட்டத்தால் பரபரப்பு 


ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதற்காக சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டில் தங்கி இருந்தார். இந்த நிலையில் முதல்-அமைச்சர் சேலத்தில் தங்கியிருப்பதை அறிந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் 700-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை 7 மணியளவில் முதல்-அமைச்சர் வீட்டு முன்பு கூடினர். பின்பு அவர்கள் பணி நியமனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முதல்-அமைச்சரின் உருவப்படம் பொறித்த பதாகைகளை கையில் ஏந்தியபடி வரிசையாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் பரபரப்பு உண்டானது. இந்த நிலையில் சென்னை செல்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் இருந்து கார் மூலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு புறப்பட்டார். அவர் சென்றதை அறிந்ததும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் சிலர் திடீரென்று அந்த இடத்திலேயே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Post a Comment

Previous Post Next Post