டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) கே.நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
2020 டிசம்பர் பருவத்துக்குரிய துறைத் தேர்வுகள் பிப்ரவரி 14 முதல் 21-ம் தேதி வரை (சனி, ஞாயிறு உட்பட) நடைபெற உள்ளன. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வாயிலாக ஜனவரி 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விதிமுறைகள், பாடத்திட்டம், தேர்வு அமைப்பு முறை, தேர்வுமையம், தேர்வு கட்டணம், காலஅட்டவணை உள்ளிட்ட விவரங்களை தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) காணலாம். இந்தத்துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது ஆதார் எண்ணை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
அரசு ஊழியர்கள் துறைத்தேர்வுக்கு ஆதார் கட்டாயம்

Post a Comment