ராஜஸ்தான் மாநிலம் சுருவில் உள்ள ஓ.பி.ஜே.எஸ். பல்கலைக்கழகம், ஆல்வாரில் உள்ள சன்ரைஸ் பல்கலைக்கழகம், ஜுன்ஜுனுவில் உள்ள சிங்கானியா பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பி.எச்டி. பட்டங்கள் வழங்க பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) தடை விதித்துள்ளது. 
இது தொடர்பாக யு.ஜி.சி. செயலாளர் மணிஷ் ஜோசி கூறுகையில், ‘இந்த 3 பல்கலைக்கழகங்களும் பி.எச்டி தொடர்பான யு.ஜி.சி.யின் விதிமுறைகள் மற்றும் கல்வி விதிமுறைகளை பின்பற்றாததை யு.ஜி.சி.யின் நிலைக்குழு கண்டுபிடித்து உள்ளது. 
மேலும் இந்த பட்டத்தின் கண்ணியத்தில் சமரசம் செய்து கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே இந்த பல்கலைக்கழங்களில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு பி.எச்டி மாணவர்களை சேர்க்க தடை விதிக்கப்பட்டு உள்ளது’ என தெரிவித்தார். இந்த பல்கலைக்கழகங்களின் பி.எச்டி பட்டங்கள் மேல்படிப்புக்கோ அல்லது வேலைவாய்ப்புக்கோ அங்கீரிக்கப்பட்டதாக இருக்காது என்பதால் இந்த பல்கலைக்கழகங்களில் சேர வேண்டாம் என மாணவர்களையும், பெற்றோரையும் அறிவுறுத்துவதாகவும் அவர் கூறினார்.

Post a Comment

Previous Post Next Post