5-ஆம் வகுப்பு - அறிவியல் - இரண்டாம் பருவம் - 2 நீர் - வினா விடைகள் - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Friday 21 October 2022

5-ஆம் வகுப்பு - அறிவியல் - இரண்டாம் பருவம் - 2 நீர் - வினா விடைகள்

PREPARED BY THULIRKALVI TEAM  

அறிவியல்

2 நீர்
பக்கம் - 81

I. சரியான விடையைத் தேர்ந்தெடு. 

 1. கீழ்க்கண்ட நுண்ணுயிரிகளில் எவை நீரால் பரவும் நோய்களைத் தோற்றுவிக்கின்றன?

 அ. பாக்டீரியா ஆ. வைரஸ் இ. புரோட்டோசோவா ஈ. அனைத்தும் 

விடை: ஈ. அனைத்தும் 

 2. _____________ இல் நீரானது அதிக அளவில் நீராவியாகவும், மேகங்களாகவும் காணப்படுகிறது. 

அ. வானம் ஆ. பூமி இ. வளி மண்டலம் ஈ. மழை 

விடை: இ. வளி மண்டலம் 

 3. _____________ நீரில் மாசுக்கள் இருக்காது. 

அ. கடல் ஆ. கிணற்று இ. ஆற்று ஈ. நிலத்தடி 

விடை: ஈ. நிலத்தடி

 4. ____________ நீர் கடலிலும் பெருங்கடலிலும் காணப்படுகிறது. 

அ. 97% ஆ. 87% இ. 47% ஈ. 77.5% 

விடை: அ. 97% 

 5. ___________ என்பது கடல் நீரை தூய நீராக மாற்றும் – செயற்கையான செயல்பாடாகும். 

அ. பின்னக் காய்ச்சி வடித்தல் ஆ. தெளிய வைத்து இறுத்தல் இ. தலைகீழ் சவ்வூடு பரவல் ஈ. உப்புத் தன்மை நீக்குதல் 

விடை: ஈ. உப்புத் தன்மை நீக்குதல் 

 II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. நிலத்தடி நீர் _______________ வடிவில் புவியின் மேற்பரப்பிற்கு வெளியே வரும்.

 விடை: ஊற்று நீர் 

2. நீரானது சூரிய வெப்பத்தினால் ஆவியாக மாறுவதற்கு _______________ என்று பெயர். 

விடை: ஆவியாதல் 

 3. மழை நீரால் உருவாக்கப்பட்ட நீரோடை மற்றும் _______________ ஆகியவை ஒன்றிணைந்து ஆறாக உருவாகின்றன. 

விடை: ஊற்று நீர் 

4. மழை நீரைச் சேகரித்து அதைச் சேமிக்கும் முறைக்கு ________________ என்று பெயர். 

விடை: மழைநீர் சேகரிப்பு 

 5. காலரா நோயைத் தோற்றுவிப்பது ________________. 

விடை: விப்ரியோ காலரே பாக்டீரியா 

 III. பொருத்துக. 

 1. எண்ணெய்க்கசிவு – மேகம் 

2. நீர்த் தேக்கம் – தாவர வளர்ச்சி 

3. பின்னக்காய்ச்சி வடித்தல் – கடல் வாழ் உயிரிகளை மாசுபடுத்துதல் 

4. மழை நீர் சேகரிப்பு – இன்புளூயன்சா வைரஸ் 

5. பன்றிக் காய்ச்சல் – அணைக்கட்டு 

விடை: 

1. எண்ணெய்க்கசிவு – கடல் வாழ் உயிரிகளை மாசுபடுத்துதல் 

2. நீர்த் தேக்கம் – அணைக்கட்டு

 3. பின்னக்காய்ச்சி வடித்தல் – மேகம் 

4. மழை நீர் சேகரிப்பு – தாவர வளர்ச்சி 

5. பன்றிக் காய்ச்சல் – இன்புளுயன்சா வைரஸ் 

 IV. சுருக்கமாக விடையளி. 

 1. நீரின் மூலங்களை எழுதுக. 

விடை: ஆறுகள், ஓடைகள், நிலத்தடி நீர், மழைநீர், உருகிய , பனிப்பாறை ஆகியவை தனித்தோ அல்லது சேர்ந்தோ ஏரிகள், – நீர்த்தேக்கங்கள் மற்றும் குட்டையில் காணப்படும் நீரின் – ஆதாரங்களாக உள்ளன. 

 2. உப்பு நீக்கல் என்றால் என்ன?

 விடை: கடல்நீரைக் குடிநீராக்குதல் என்பது கடல்நீரில் உள்ள உப்பை’ அகற்றி தூய நீராக மாற்றும் செயற்கையான செயல்முறையாகும். கடல்நீரைக் குடிநீராக்குவதற்கு காய்ச்சி – வடித்தல், தலைகீழ் சவ்வூடு பரவல் ஆகிய முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. 

 3. நீர்சுழற்சியின் படிநிலைகள் யாவை? 

விடை: ஆவியாதல் ஆவி சுருங்குதல் வீழ்ப்படிவாதல் கடலை நோக்கிச் செல்லுதல் 

 4. நீர்த்தேக்கம் என்றால் என்ன? 

விடை: ஆற்றின் குறுக்காக அணை கட்டப்படுவதன் மூலம் மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரிகள் தோன்றுகின்றன. இவை நீர்தேக்கங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. 

 5. டெங்கு காய்ச்சலை எவ்வாறு தவிர்க்கலாம்? 

விடை: 

→ வீட்டைச் சுற்றிலும் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

→ அதிகாலை மற்றும் மாலை வேலைகளில் கதவைப் பூட்டி வைத்திருக்க வேண்டும். 

→ வீட்டைச்சுற்றிலும் கொசுக்களைத் தடுக்கும் திரவத்தைத் தெளிக்க வேண்டும்.

 → உடல் பகுதிகளை மூடியிருக்கும் வகையில் ஆடை அணிய வேண்டும். 

 V. விரிவாக விடையளி. 

 1. மழை நீர் சேகரிப்பின் நன்மைகள் யாவை? 

விடை: மழை நீர் சேகரிப்பின் நன்மைகள் : 

→ நகரங்களில் வெள்ளம் ஏற்படுவதைத் தவிர்க்கிறது. 

→ புவியின் மேற்புற மண் அரிக்கப்படுவதைத் தவிர்க்கிறது.

 → தாவர வளர்ச்சியை அதிகரிக்கிறது.

 → நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துகிறது. 

→ நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படுகிறது. 

 2. நீர் மூலம் பரவும் நோய்களை எவ்வாறு தவிர்க்கலாம்? 

விடை: 

→ முறையான தன் சுத்தம் பேணுதல் வேண்டும். சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும். 

→ குளோரின் கலந்த, கொதிக்க வைக்கப்பட்ட நீரையே பருக வேண்டும். 

→ நன்கு கொதிக்க வைத்த அல்லது பதப்படுத்தப்பட்ட பாலைக் குடிக்க வேண்டும். 

→ தொற்று நோய் பரப்பும் கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும்.

PREPARED BY THULIRKALVI TEAM

No comments:

Post a Comment