ராணுவப் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் 

பெங்களூரு

தேசிய ராணுவப் பள்ளி யில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின் றன. இதுகுறித்து தேசிய ராணுவப் பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உத்தர்கண்ட் மாநிலத்தில் டெஹ்ராடூனில் உள்ள தேசிய ராணுவப் பள்ளிகளில் 2021-22- ஆம் கல்வியாண்டில் 8-ஆம் வகுப்புகளில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்களிடம் இருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இதற்கான நுழைவுத் தேர்வு நாட்டின் பல்வேறு நகரங்களில் நடக்க இருக்கின்றன. கர்நாடகத் தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 2021 ஜூன் 5-ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடக்க இருக்கிறது. அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 7-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் அல்லது தேர்ச்சி பெற்றவர்கள், 2.7.2006 முதல் 1.1.2008- ஆம் ஆண்டுக்குள் பிறந்தவர்கள் மட்டும் நுழை வுத்தேர்வு எழுத தகுதியானவர்கள் ஆவர்.# 

ராணு வத்தில் சேர மாணவர்களை தகுதிப்படுத்துவது இப்பள்ளியின் முக்கிய நோக்கமாகும். www.rimc.gov.in என்ற இணையதளத்தில் கட்டணம் செலுத்தி, விண்ணப்பங்களை நிரப்பி 

முகவரி 

இயக்குநர், 
முன்னாள் ராணுவ வீரர் நல்வாழ் வுத் துறை, 
பீல்டுமார்ஷல் கே.எம்.காரியப்பா மாளிகை, 
கே.எம்.காரியப்பா சாலை, 
பெங்க ளூரு-25 

என்ற முகவரியில் ஏப். 15-ஆம் தேதிக் குள் செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வு, நேர்கா ணல், மருத்துவ தகுதிச்சான்றின் அடிப்படையில் மாணவர்களுக்கு சேர்க்கைப் பட்டியல் தயாரிக் கப்படும். மேலும் விவரங்களுக்கு 080-25589459 என்ற தொலைபேசி எண்ணில் அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
eduntz
eduntz.com


Post a Comment

Previous Post Next Post